tamilnadu

img

பொன்னமராவதி வாரச்சந்தையில் மீண்டும் டாஸ்மாக் கடை திறப்பதை கைவிடுக! சிபிஎம் போராட்டம் அறிவிப்பு

பொன்னமராவதி, ஜன.29- புதுக்கோட்டை பொன்னமராவதி பேருந்து நிலையம் அருகே உள்ள வாரச் சந்தையில் அரசு மதுபான கடை அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என சிபிஎம் வலியுறுத்தி உள்ளது.  மதுபானக் கடை அமைய இருக்கும் பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்த பின் சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் கூறியதாவது:  பொன்னமராவதி பேருந்து நிலை யம் அருகிலுள்ள வாரச்சந்தை வாரம் இருமுறை கூடுகிறது. பத்தாயிரத்திற் கும் மேற்பட்டோர் வந்து தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் அனைத்து விதமான பொருட்களும் வாங்கி செல்கின்றனர். இதில் அதிக அளவு பெண்களே வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த போது சிபிஎம் மற்றும் பொதுமக்களின் கடுமை யான போராட்டத்தின் காரணமாக இந்த இடத்தில் இருந்த மதுபானக் கடை அகற்றப்பட்டது. தற்போது மீண்டும் வாரச் சந்தைக்கு நடுவே அரசு மதுபான கடை அமைக்க முயற்சிகள் நடப்ப தாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே உள்ளன. எனவே அரசு மதுபானக்கடை வாரச்சந்தைக்கு நடுவில் அமைப்பதை கண்டித்து பொதுமக்களை திரட்டி வருகிற பிப்ரவரி மூன்றாம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும். மேலும் மாவட்ட ஆட்சியரும், டாஸ்மாக் நிறுவனத்தின் பொது மேலாளரும் இங்கு அரசு மதுபான கடை அமைக்க மாட்டோம் என வெளிப்படையாக உறுதி அளிக்கும் வரை சிபிஎம் தொடர்ந்து போராடும் என்று கூறினார்.

;