புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் நெய்வத்தளி ஊராட்சி கிராமசபை கூட்டம் தலைவர் சுபலட்சுமி வைரவன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மேமக்காடு குடியிருப்பில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும். ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகத்தை சரி செய்து தர வேண்டும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.