tamilnadu

img

துளிர் திறனறிதல் தேர்வுகளில் 1425 மாணவர்கள் பங்கேற்பு

புதுக்கோட்டை, நவ.5- தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் புதுக்கோட் டை மாவட்டத்தில் நடைபெற்ற துளிர் திறனறிதல்தேர்வில் 1425 பேர் பங்கேற்றனர். இதுகுறித்து போட்டிகளின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கா.ஜெயபாலன் தெரிவித்துள்ளது: தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் நடப் பாண்டுக்கான துளிர் திறனறிதல் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 4,5 வகுப்புகளுக்கு துவக்க நிலை, 6,7,8 வகுப்புகளுக்கு இளநிலை, 9,10 வகுப்பு களுக்கு உயர்நிலை, 11,12 வகுப்புகளுக்கு மேல்நிலை  என நான்கு பிரிவுகளாக இந்தப் போட்டிகள் நடைபெற்றன, புதுக்கோட்டை ராணியார் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கந்தர்வகோட்டை ஒன்றியம் வெள்ளாளவிடுதி அரசு உயர்நிலைப் பள்ளி, கறம்பக்குடி, அன்னவாசல் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட  20 மையங்களில் இத்திறன றிதல் தேர்வுகள் நடைபெற்றது. 50-க்கும் மேற்பட்ட பள்ளி களில் இருந்து 1425 மாணவர்கள் பங்கேற்றனர்.  தேர்வு மையங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலெட்சுமி, மாவட்டக் கல்வி அலுவலர் இராசேந்திரன், அறிவியல் இயக்க மாவட்ட நிர்வாகிகள் அ.மணவாளன், கா.சதாசிவம், எம்.முத்துக்குமார், கா.ஜெய பாலன், எம்.வீரமுத்து, சிவானந்தம் உள்ளிட்டோர் பார்வை யிட்டனர். ஒவ்வொரு பிரிவிலும் சிறப்பாக தேர்வு எழுதிய மாணர்வர்கள் தேர்வு செய்யப்பட்டு கல்விச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செயல்லப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.