tamilnadu

img

திருமணம் முடிந்த 2 நாளில்  கெரோனாவால் மணமகன் மரணம் - 95 பேருக்கு தொற்று உறுதி

பீகாரில் திருமணம் முடிந்த 2 நாளில் மணமகன் கொரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள திபாலி கிராமத்தில் 30 வயதான மென்பொறியாளர் ஒருவருக்கு திருமணம் நடந்தது.  திருமணம் நடந்த 2 நாட்களில் மணமகன் கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்தார். இதையடுத்து திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் திருமணத்தில் கலந்து கொண்ட 95பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள தகவல் படி, 30 வயதான மணமகன் தனது திருமணத்திற்காக மே 12 அன்று சொந்த கிராமமான தீபாலிக்கு திரும்பினார். அப்போது அவர் கோவிட் 19 அறிகுறிகளுடன் இருந்தார். ஆனால் குடும்பத்தினர் திருமண விழாவினை  நடத்தியது. திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவரது உடல்நிலை மோசமடைந்தது. அவர் பாட்னாவின் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு  கொண்டு செல்லப்பட்டபோது அவர் இறந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.