tamilnadu

img

பீகார்: சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது 

பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் கொரோனா ஊரடங்கைத் தொடர்ந்து முதல் முறையாக பீகாரில் சட்ட மன்றத் தேர்தல் நடைபெறுகிறது. பீகாரில் 243 பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 28 நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து நவம்பர் 10ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. 
இந்நிலையில் பீகாரில் சட்ட மன்ற தேர்தலில் 71 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்கு பதிவு இன்று நடைபெறுகிறது. இதில் 114 பெண் வேட்பாளர்கள் உட்பட 1066 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளுக்காக மத்திய அரசு 30 ஆயிரம் மத்திய பாதுகாப்பு படை வீரர்களை குவித்து உள்ளது