tamilnadu

img

பீகார் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

பீகாரில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
பீகாரில் 243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநில சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. 
பிகாரில் 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாக தேர்தல் நடந்தது. அக்டோபர் 28-ம் தேதி முதல்கட்டத் தேர்தலும், நவம்பர் 3, 7-ம் தேதிகளில் 2 மற்றும் 3-ம் கட்டத் தேர்தலும் நடந்தது. இந்தத் தேர்தலில் மொத்தம் 243 தொகுதிகளில் 3,733-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். 38 மாவட்டங்களில் உள்ள 55 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இந்தத் தேர்தலில் 7.30 கோடி வாக்காளர்கள் அதாவது 57 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
இந்தத் தேர்தலில் முடிவுகளை அறிவிக்க தாமதமாகும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன
ஏனென்றால், வழக்கமாக 72,723 வாக்குப்பதிவு மையங்கள் மட்டுமே வைக்கப்பட்ட நிலையில் கொரோனா பரவல் காரணமாக வாக்குப்பதிவு மையங்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 6ஆயிரத்து 515 ஆக உயர்த்தப்பட்டது. ஏறக்குறைய 46.5 சதவீதம் வாக்கு மையங்கள் அதிகரிக்கப்பட்டன என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 
இந்நிலையில் 11.30 மணி நிலவரப்படி காங்கிரஸ் ஆர்.ஜே.டி கூட்டணி 130 இடங்களிலும் ஜேடியு பாஜக கூட்டணி 101 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.மேலும் லோக்ஜனசக்தி 4 இடங்களில் முன்னிலையிலும் மற்றவைகளில் 8 பேரும் முன்னிலையில் உள்ளன.