tamilnadu

img

இந்தியாவிற்குள் நுழைய முயன்ற ஐந்துபேர் சுட்டுக்கொலை

பஞ்சாப்:
பஞ்சாபில் உள்ள எல்லைப் பகுதியில் பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் சனிக்கிழமை அதிகாலை நுழைய முயன்றஐந்து பேர் எல்லைப் பாதுகாப்புப் படையால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.இதுகுறித்து எல்லைப் பாதுகாப்புப் படையினர் கூறுகையில், டர்ன் டரன் மாவட்டத்தில் இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் 103- ஆவது பிரிவின்எல்லைப் பாதுகாப்புப் படையினரின் கண்காணிப்புப் பகுதியில் ஆள் நடமாட்டம்காணப்பட்டது. அப்பகுதியில் தடையை மீறி ஐந்து பேர் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருந்து இந்திய பகுதியில் நுழைய முயன்றனர். அதைக் கண்ட எல்லைப்பாதுகாப்புப் படை வீரர்கள்அவர்களை சுட்டுக் கொன்றனர் எனத் தெரிவித்தனர்.

;