பீகாரில் மூளைக்காய்ச்சல் நோயால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 156 ஆக உயர்ந்துள்ளது.
பீகார் மாநிலம் முசாஃபர்பூர் மட்டுமல்லாது பிற மாவட்டங்களிலும் பல குழந்தைகள் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூளைக்காய்ச்சல் நோயால் குழந்தைகளில் ரத்தத்தில் குளுகோஸின் அளவு மிகக் குறைவாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் காய்ச்சல் பாதிப்பு காரணமாக இதுவரை 156 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஸ்ரீ கிருஷ்ணா மற்றும் கெஜ்ரிவால் அரசு மருத்துவமனைகளில் 400க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடுமையான மூளையழற்சி நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று என்ற அச்சம் எழுந்துள்ளது.