மத்திய சுகாதாரத்துறைக்கு பி.ஆர்.நடராஜன் எம்.பி., கடிதம்
கோயம்புத்தூர்,ஏப்.13- மருத்துவ சாதனங்கள் பற்றாக்குறையை எதிர்கொள்ள செங்கல்பட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனத்தை பயன்படுத்த வேண்டும் என மத்திய தலைமை செயலாளர், மத்திய சுகாதாரத்துறை செய லாளர், மத்திய உள்துறை செயலாளர் மற்றும் மருந்தியல் செயலாளர் ஆகியோ ருக்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கடிதம் மூலம் வலியுறுத்தி யுள்ளார். இது தொடர்பாக பி.ஆர்.நடராஜன் எம்.பி., அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ள தாவது:
இந்திய அரசின் மருந்துகள் துறை செயலர் மருத்துவ சாதனங்கள் பற்றாக்குறை பற்றி எச்சரித்துள்ளார் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். முரண்பாடு என்னவென்றால், ஒருபுறம் சாதனங்களின் பற்றாக்குறை உள்ளது. மறுபுறம் தமிழ்நாட்டின் செங்கல் பட்டில் உள்ள ஒரு பொதுத்துறை நிறுவனம் கோவிட்-19 ஐ கண்டறிவதற்குத் தேவையான சாதனங்களைத் தயாரிப்பதற்காக அனைத்து திறன்களும் கொண்டிருந்தும், அந்த வசதியை தமிழக அரசு மற்றும் இந்திய அரசு பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதே. நெருக்கடி நேரத்தில் பொதுநிதி வசதி பயன்படுத்தப் படாமல் பிரயோஜனமின்றி வைக்கப்படுவது பெரும் கவலையை ஏற்படுத்துகிறது.
போதுமான நிதி அளித்திடுக
தமிழ்நாட்டில் செங்கல்பட்டில் உள்ள இந்த நிறுவனத்திற்கு தேவையான உரிமம், போதுமான நிதி அளித்து எல்லாவகையான ஆதரவும் தந்து, இந்த பொதுத்துறை நிறுவனத்தை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள இந்திய அரசு உறுதியுடன் முன்வர வேண்டும். எச்எல்எல் லைஃப் கேர் லிமிட்டெட் நிறுவனத்தின் 100 சதவீத துணை நிறுவன மான, எச்எல்எல் பயோடெக் லிமிட்டெட் (HBL) என்ற நிறுவனம் உள்ளது. இது நடப்பு பொருட்கள் தயாரிப்பு முறைகளோடு ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட தடுப்பூசி வளாகத்தை சென்னைக்கு அருகில் செங்கல்பட்டில் உருவாக்கியுள்ளது.
செங்கல்பட்டிலுள்ள இந்த நிறுவனம், நல்ல உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளது. மொத்தம் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த நிறுவனம், சிறந்த விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டுள்ளது. கோவிட் 19- ஐ எதிர்த்து, போராடத் தேவை யான, கை சுத்திகரிப்பான்கள் மற்றும் வைரல் டிரான்ஸ்போர்ட் மீடியா மற்றும் ஆர்&டி ஆகியவற்றுடன் இவர்கள் முழுமையாக உதவுகிறார்கள்.
ஆல்கஹால் மூலப்பொருளைக் கொண்டு, கிருமி நாசினியை மாதத்திற்கு 20 ஆயிரம் லிட்டர் தயாரிப்பதற்கான உரிமத்தை எச்பிஎல் பெற்றுள்ளது. அவர்கள், 6000 லிட்டர் ஹேண்ட் சானிடிசர்ஸ் (hand sanitizers) களை கேரள அரசிற்கு வழங்கி யுள்ளனர். இந்த மத்திய அரசின் பொதுத்துறை முயற்சியை, இந்திய அரசும் , தமிழ்நாடு அரசும் முழுமையாக பயன்படுத்தவும் ஊக்குவிக்கவும் வேண்டும். கோவிட் 19 பாஸிட்டிவ் எண்ணிக்கை, தினமும் உயர்ந்து கொண்டுள்ளது. இந்திய அரசு, உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) ஆகிய ஒவ்வொருவரும் , இந்த நெருக்கடியை எதிர்த்துப் போராட, கண்டறிதல் மற்றும் தனிமைப்படுத்துதலை வலியுறுத்துகின்றனர்.வைரஸ் போக்கு வரத்து ஊடகம் (VTM), எப்படி இருக்கிறது என்பதை எச்பிஎல் அறிந்திருக்கிறது.
இது சம்பந்தப்பட்ட உரிமத்திற்கான இந்நிறுவனத்தின் விண்ணப்பம் ,இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசின், மருந்துக் கட்டுப்பாட்டு அதிகார அமைப்புகளிடம் நிலுவையில் உள்ளது. தொற்று நோய் தாக்கியதாக சந்தேகப்படும் நபர்களிட மிருந்து, மாதிரிகள் (ஸ்வாப்) எடுப்பதற்கும், ஆய்வகங்களுக்கு, கண்டறிதல் சோதனைக்காக (RT-PCR) கொண்டு செல்வ தற்கும், இந்த வைரஸ் போக்குவரத்து ஊடகம் (VTM) மிக முக்கியமானது. கோவிட்19-ஐ எதிர்க்கும் போராட்டத்தில் இது நீண்ட தூரம் செல்கிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) மற்றும் இந்திய அரசின் , சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம், ஆகியவற்றின் ஆதரவு எச்பிஎல் நிறுவனத்திற்கு தேவைப்படுகிறது.
பிசிஜி போடப்பட்டவர்களிடம் நோய் எதிர்ப்பு திறன்
நன்கு நிறுவப்பட்ட, ஒரு அமெரிக்க ஆராய்ச்சி கூறுவது என்னவென்றால், கோவிட்19-ஐ எதிர்க்கத் தேவையான நோய் எதிர்ப்புத் திறன், பிசிஜி தடுப்பூசி போடப்பட்ட நபர்களிடம் அதிகமாக உள்ளது, (உதாரணம்..ஜப்பான்) பிசிஜி தடுப்பூசி போடப்படாத நபர்களின் இந்த நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக உள்ளது.(உதாரணம்..இத்தாலி) ஏற்கனவே, யூனிவர்சல் இம்யூனைசேஷன் திட்டத்தின் (UIP) கீழ், இந்தியா, தமிழ்நாட்டின் கிண்டியில் உள்ள பிசிஜி தடுப்பூசி ஆய்வகத்தால், தயாரிக்கப்பட்ட பிசிஜி தடுப்பூசிகளை, ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவில் பிறக்கும் 25 மில்லியன் குழந்தைகளுக்கு வழங்கி வருகிறது.
எச்பிஎல் நிறுவனம், 100 மில்லியன் பிசிஜி அளவுகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.இது தமிழக அரசின் மருந்துக் கட்டுப்பாட்டு அதிகார அமைப்பிடமிருந்து, சோதனை கையாளுதல் (Test manufacturing license) உரிமத்தை பெற்றுள்ளது. இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தேவையான நிதி உதவியுடன், மருத்துவ சோதனை மற்றும் ஆராய்ச்சி, அதன் தர்க்க ரீதியான முடிவுக்கு கொண்டு செல்லப்படலாம்.
இந்த பொதுத்துறை நிறுவனத்திற்கு தேவையான உரிமம், போதுமான நிதி மற்றும் கிடைக்கக்கூடிய வசதியை உகந்த உத்தம அளவில் பயன்படுத்துவதற்கான அனைத்து ஆதரவும் வழங்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.