tamilnadu

img

தமிழகம் கேட்ட தொகையை மத்திய அரசு வழங்கவில்லை

முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

சேலம்,மே 23- கொரோனா தொற்று கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்  தமிழகம் கேட்ட தொகையில் போதிய நிதியை மத்திய அரசு வழங்க வில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை கள் குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமையன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதி காரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் முதலமைச்சர் செய்தியா ளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் நாள்தோறும் சுமார் 13 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் நடைபெறுகின்றன.  புறநகர் பகுதி களில் சிறு குறு தொழில்கள் இயங்கத் தொடங்கியுள்ளன.   ஆட்டோக்கள் இயக்கவும் சலூன் களை இயக்கவும் திறக்கவும் அனு மதி அளிக்கப்பட்டுள்ளது.  குடிநீர் தட்டுப் பாட்டைப் போக்க அரசு தீவிர நட வடிக்கை எடுத்து வருகிறது. மருத்து வக்குழு ஆலோசனையின் படி கொரோ னாவை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பொது மக்கள் வெளியே சென்றால் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.  அரசின் நடவ டிக்கையால் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கிறது. தமி ழகத்தில் உள்ள வெளிமாநில தொழி லாளர்கள் சொந்த ஊர் செல்ல நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

கொரோனா பாதிப்பு தமிழகத்தில் சமூக பரவலாக இல்லை. கொரோனா வை தடுப்பதில் தமிழக அரசு முழு வீச்சில் செயல்படுகிறது. மருத்து வர்கள், செவிலியர்களின் பணி பாராட் டுக்குரியது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து  கிடைக்க நட வடிக்கை எடுக்கப்படும்.  அரசின் வழிமுறையை மாவட்ட நிர்வாகம் பின்பற்றியதால் கொரோனா இல்லாத மாவட்டமாக சேலம் மாறி யுள்ளது. வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே தற்போது சிகிச்சை அளிக்கப் படுகிறது. 

மருத்துவ நிபுணர்களின் ஆலோ சனையின் பேரில் அடுத்தக்கட்ட நட வடிக்கைகள் இருக்கும். கொரோனா பாதிப்பு தமிழகத்தில் சமூக பரவலாக இல்லை. தமிழகம் கேட்ட தொகையில் போதிய நிதியை மத்திய அரசு வழங்க வில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.