நிஜாமாபாத் (ஆந்திரா), ஏப்.10- தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் போதன் நகரைச் சேர்ந்தவர் ரஜியாபேகம் (50). பள்ளி ஆசிரியர் இவர் தனது மகனை அழைத்து வந்தது குறித்து கூறியதாவது:-
2019- ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பு முடித்த முஹமது நிஜாமுதீன் (17), ஹைதராபாத்தில் உள்ள ஒரு பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வருகிறார். மார்ச் 12- ஆம் தேதி, நிஜாமுதீன் தனது நண்பருடன் நெல்லூருக்குச் சென்றார், அங்கு நண்பரின் தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரைப் பார்க்கச் சென்றநிலையில் ஊரடங்கு அமல்படுத்த ப்பட்டார். இதனால அவரால் வீடு திரும்பமுடியவில்லை. இந்த நிலையிலேயே நான் ஸ்கூட்டியில் மூன்று நாட்கள் 1,400 கி.மீ பயணம் செய்து எனது மகனை அழைத்து வந்தேன். திங்களன்று காலை வீட்டிலிருந்து புறப்பட்டு செவ்வாய்க்கிழமை பிற்பகல் நெல்லூரை அடைந்தேன். அங்கு நண்பர் வீட்டிலிருந்த எனதுமகனை அழைத்துக்கொண்டு புதன்கிழமை மாலை வீடு வந்து சேர்ந்தேன். கொரோனா தாக்கத்தால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் எனது மகனை அழைத்து வருவதற்கு காவல்துறை உதவியை நாடினேன்.
போதன் நகர் உதவி காவலி ஆணையர் வி.ஜெயபால் ரெட்டி எனக்கு கடிதம் ஒன்றை அளித்தார். அதில் எனது நிலைமையை சுட்டிக்காட்டி தடையில்லா பயணத்திற்கு அனுமதிக்கவேண்டுமென கேட்டுக்கொண்டார். அந்தக் கடிதம் எனக்கு பேருதவியாக இருந்தத. பல இடங்களில் காவல்துறையினர் என்னை தடுத்து நிறுத்தினர். காவல்துறை அதிகாரி அளித்த கடிதத்தை காட்டியபின் என்னை அனுமதித்தனர் என்றார். இவ்வாறு அவர் கூறினார்.