கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி வேலைநேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக மாற்ற ஆட்சியாளர்கள் முயற்சித்து வருகின்றனர். ஒரு சில மாநிலங்களில் இதற்கான அறிவிக்கையும் செய்துள்ளனர். தமிழகத்திலும் அதற்கான முயற்சி நடைபெற்று வருகிறது. இவற்றை எதிர்த்து போராட்டம் நடத்த சிஐடியு அறைகூவல் விடுத்தது. அதன்படி தமிழகம் முழுவதும் ஞாயிறன்று (மே 10) காலை 10.30 மணி முதல் 10.40 மணி வரை தங்களது வீடுகளின் முன் செங்கொடியுடனும், கோரிக்கை அட்டைகளுடனும் உரிமை முழக்கத்தை தொழிலாளர்கள் எழுப்பினர். அதன் ஒரு பகுதியாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் நடைபெற்ற போராட்டங்கள்.