tamilnadu

img

எம்எல்ஏக்கள் தலைமையில் பேரிடர் மீட்புக் குழு

சென்னை,ஜூலை 17- சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் பேரிடர்  மீட்புக் குழு அமைப்பது குறித்து அரசு பரிசீலிக்க வுள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரி வித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் வருவாய்த் துறை  மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து  கொண்டு பேசிய திமுக உறுப்பினர் மா.சுப்பிர மணியன், “வெளிநாடுகளில் பேரிடர் மேலாண்மை குறித்து பள்ளிகளில் பயிற்சி வழங்குவது போல தமிழக பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும் என்றும், மாநில, மாவட்ட அளவில் உள்ளது போன்று ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பி னர் தலைமையிலும் தொகுதி வாரியாக பேரிடர் மீட்புக் குழு அமைக்கப்பட வேண்டும்” என்றார். இதற்கு பதிலளித்த வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், “இயற்கை பேரி டர்களை எதிர்கொண்டு சமாளிக்க தொலை  நோக்குத் திட்டம் தமிழகத்தில் அறிமுகப்ப டுத்தப்பட்டுள்ளது. வட்டாட்சியர் தலைமையில் செயல்படக் கூடிய பேரிடர் மீட்புக் குழுவி னர்போல, சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் ஒரு பேரிடர் மீட்புக் குழு அமைப்பது குறித்து அரசு பரிசீலிக்கும்” என்றார்.