tamilnadu

img

மே மாதத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு

சென்னை, ஏப்.9- மே மாதத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்த பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தக வல்கள் வெளியாகி உள்ளது.  மாணவர்களை தேர்வுக்கு  தயாராகுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் 24 ஆம் தேதி நள்ளிரவு முதல் ஏப்ரல்  14 தேதி வரை நாடு முழுவ தும் 21 நாட்கள் ஊரடங்கை  பிரதமர் மோடி அறி வித்தார். இதன் காரணமாக நாடு முழுவதும் பொது போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1 முதல்  9 ஆம் வகுப்பு வரை தேர்வு கள் ரத்து செய்யப்பட்டுள் ளது. அனைவரும் தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட் டுள்ளது. 12ஆம் வகுப்பு தேர்வுகள் முடிந்துவிட்ட நிலையில் 10ஆம் வகுப்பு தேர்வுகள் கொரோனா பிரச்சனை காரணமாக தேதி  குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்  பட்டது.

ஆனால் கொரோனா வைரஸ் தமிழகத்தில் வேக மாக பரவி வரும் நிலையில்  மீண்டும் தேர்வு நடைபெ றுமா என்கிற அளவுக்கு சந்தேகம் எழுந்தது. ஊர டங்கும் ஏப்ரல் 14ஆம்  தேதிக்குப் பிறகு நீடிக்க  வாய்ப்பு இருப்பதாக தக வல்கள் வெளியாகி வருகிறது. இந்தியாவி லேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. சுமார் 730பேருக்கு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் 10ஆம் வகுப்பு  பொதுத்தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று ஆசிரியர் கள் தரப்பில் கோரிக்கையும் அண்மையில் வைக்கப்பட் டது.

இந்நிலையில் மே மாதத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்த பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள் ளதாக தகவல்கள் வெளி யாகி உள்ளது. மே மாதத்தில்  10 நாட்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை  நடத்தி முடிக்க கல்வித்துறை  திட்டமிட்டுள்ளதாக கூறப் படுகிறது. இதனால் பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு தயாராக  இருக்குமாறு அறிவுறுத்தப் படுகிறது.