tamilnadu

img

ஆவின் பால் பொருட்களின் விலை உயர்வு

ஆவின் நிறுவனம் தயாரிக்கும் பால் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆவின் பாலின் விலை கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழக அரசால் உயர்த்தப்பட்டது.இது சாதாரண மக்களை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கியது. இதனை தொடர்ந்து ஆவின் பால் விலை உயர்வால் பால் பொருட்களின் விலையும் உயர்த்தியுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஆவின் நிறுவனம் தயாரிக்கும், மக்களின் அத்தியாவசிய பொருட்களான நெய், பால் பவுடர், பன்னீர், தயிர், பால்கோவா, வெண்ணெய் போன்ற பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.மேலும் இந்த விலை உயர்வு செப்.18 முதல் அமுலுக்கு வருமென தெரிவித்துள்ளனர்.

;