புதுச்சேரி, நவ. 25- நலவாரியம் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்த உறுதிமொழியை ஏற்று புதுச்சேரி யில் நடைபெறவிருந்த பந்த் போராட்டம் தள்ளி வைக்கப்பட்டது. ஆட்டோ ஓட்டுநர்கள், கடைஊழியர்கள், தையல் கலைஞர்கள் உள்ளிட்ட 27வகையான தொழிலில் ஈடுபட்டுள்ள முறைச்சாரா தொழி லாளர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும் என்று சிஐடியு உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கத்தினர் புதுச்சேரி அரசை வலி யுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைக்காக நவம்பர் 27 ஆம் தேதி புதுச்சேரியில் ஒரு நாள் வேலைநிறுத்தம் பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தி ருந்தனர்.
பேச்சுவார்த்தை
இந்நிலையில் புதுச்சேரி தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கந்தசாமி தலைமை யில் திங்களன்று (நவ.25) சட்டப்பேரவையில், அனைத்து தொழிற்சங்க தலைவர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகான், அமைச்சர் கந்தசாமி, அரசு செய லர், தொழிலாளர் நலத்துறை ஆணையர் வள்ளவன் சிஐடியு பிரதேசத் தலைவர் கே. முருகன், செயலாளர் சீனுவாசன், பொருளா ளர் பிரபுராஜ், ஏஐடியுசி நிர்வாகிகள் அபி ஷேகம், சேதுசெல்வம், ஐஎன்டியுசி பிரதேசத் தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தை குறித்து செய்தி யாளர்களிடம் பேசிய அமைச்சர் கந்தசாமி, “அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வரும் ஜனவரி மாதம் 10 ஆம்தேதிக்குள் நலவாரி யம் அமைக்கப்படும் என்று இதனால் 27 ஆம் தேதி நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொழிற்சங்கத் தலைவர்கள் மறுபரிசீலனை செய்ய சங்கத் தலைவர்களி டம் கேட்டுக்கொண்டுள்ளோம்” என்றார். தீபாவளி பண்டிகை உதவித் தொகை ரூ.1000 இன்னும் இரண்டு தினங்களுக்குள் நலச்சங்க உறுப்பினர்களின் வங்கிக் கணக் கில் செலுத்தப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.
தள்ளி வைப்பு
சிஐடியு தலைவர் கே.முருகன் செய்தியா ளர்களிடம் கூறுகையில்,“ அமைச்சர் கந்த சாமி, மற்றும் அதிகாரிகள், தொழிற்சங்கத் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டத் தில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நல வாரியம் ஜனவரி 10ஆம் தேதிக்குள் அமைக் கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர். எனவே நவம்பர் 27ல் புதுச்சேரியில் நடை பெற இருந்த பொதுவேலைநிறுத்தம் பந்த் போராட்டம் தற்காலிகமாக தள்ளி வைக்கப் பட்டுள்ளது. அரசின் முடிவை பொருத்தே அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள் வோம்” என்றார். அனைத்து தொழிற் சங்கங்களின் கோரிக்கைக்கு ஆதரவு கொடுத்த அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு இயக்கங் களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.