சிஐடியு தென் சென்னை மாவட்டத் தலைவர் இ.பொன்முடி, மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன் ஆகியோர் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: அரசாங்கப் போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், சாலைப்போக்குவரத்து சங்க தென்சென்னை மாவட்ட செயலாளருமான கே.சேகர், சிஐடியு கோட்பாடுகளுக்கு விரோதமாக வும், தொழிற்சங்க விரோத நடவடிக்கை களிலும் ஈடுபட்டதோடு, சுயநல நோக்கோடு சங்க வழக்குகளை பயன்படுத்தி போட்டி சங்கங்களை ஏற்படுத்தியதாலும் சிஐடியு வின் அனைத்து பொறுப்புகளிலிருந்து நீக்கப் பட்டுள்ளார். அவருடன் சிஐடியு தோழர்கள் தொழிற் சங்க சார்பாக தொடர்பு எதுவும் வைத்துக் கொள்ள வேண்டாமெனவும், வழக்குகள் சம்பந்தமாக அணுக வேண்டா மெனவும் சிஐடியு தென்சென்னை மாவட்டக் குழுவின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.