லக்னோ, மார்ச் 3- உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி அருகே பழமையான நகரம் மண்ணில் புதையுண்டு இருப்பதைத் தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். வாரணாசி அருகே பாபாநியாவ் எனும் இடத்தில் அகழாய்வு நடத்தப்பட்டது.இதில், குப்தர்கள் காலத்தைச் சேர்ந்தவை எனக் கருதப்படும் உலை, நன்கு திட்ட மிட்டுக் கட்டப்பட்ட கட்டுமானங்கள், செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்கள் ஆகி யன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த அகழாய்வில் கிடைத்த மட்பாண் டங்கள் நாலாயிரம் ஆண்டுகள் பழமை யானவை எனவும், சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்கள் இரண்டாயிரம் ஆண் டுகள் பழமையானவை எனவும் இந்தப் பகுதி நகர்ப்புறத்தையொட்டிய கைவினை ஞர்களின் குடியிருப்பாக இருக்கும் எனக் கருதுவதாகவும் காசி இந்துப் பல்கலைக் கழகத்தின் தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.