சென்னை, ஜூலை 22- மத்திய அரசின் மனிதவள மேம் பாட்டுத்துறை, தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறைக்கான நிதியை ஒதுக் கீடு செய்து அனுமதி அளித்துள்ளது. அதில் புதிதாக பள்ளிகளை திறப்ப தற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமலும், அனுமதி அளிக்காமலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் 2019-20 ஆம் ஆண்டிற் கான திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதற்கான வாரிய கூட்டம் கடந்த மே மாதம் 16 ஆம் தேதி நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் கலந்துகொண்டுள்ளார். அப்போது, தமிழகத்தில் பள்ளி மாண வர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, ஆலோசனை வழங்குவதற்கு 14417 என்ற கட்டணமில்லா எண் செயல்படுத்தப்படுவது, கல்வித் தகவல் மேலாண்மை மூலம் மாண வர்கள், பள்ளிகள் குறித்த புள்ளி விப ரங்கள் பெறப்பட்டு, 2019-20 ம் கல்வி யாண்டில் ‘ஸ்மார்ட் கார்டு’ மாண வர்களுக்கு வழங்கப்பட உள்ளதை யும் எடுத்துரைத்துள்ளார்.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி 33 சதவீத நடுநிலைப் பள்ளிகளில் பாடத்திற்கான ஆசிரி யர்கள் இல்லாமல் உள்ளனர். பள்ளி மேலாண்மைக்குழு அனைத்துப் பள்ளிகளிலும் உரு வாக்கப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி அளித்து பள்ளியின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும். பள்ளி ஆசி ரியர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி யுள்ளார்.
பாதுகாப்பிற்கு முக்கியத்துவம்
பள்ளி வளாகங்களில் மாண வர்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், பாலியல் தொல்லை ஏற்படுகிறது. சமீபகாலமாக வரும் தகவல்களின் படி பள்ளி வளாகத்தில் கொலை, தாக்குதல் மற்றும் பாலியல் வன்புணர்ச்சி போன்றவை நடைபெறு கிறது. எனவே பள்ளியில் பாதுகாப்பு திட்டம் முக்கியமானதாக உள்ளது. அனைத்து மாணவர்களும் சுற்றுப்புற தூய்மை மற்றும் பாதுகாப் புடன் கல்வி கற்றால் தான் வளர்ச்சி மற்றும் மேம்பாடு அடைய முடியும். எனவே ஆசிரியர்கள் முதல் ஆலோ சகராக இருக்க வேண்டும். மேலும் பள்ளியில் அவசரகால உதவி எண்களை எழுதி வைக்க வேண்டும் என்றும் அரசின் கருத்தை தெரி வித்திருக்கிறார்.
இந்த கூட்டத்தில், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றிற்கு ரூ. 3 ஆயிரத்து 171 கோடியே 23 லட்சத்து 42 ஆயிரம் ஒதுக்கீட்டை மத்திய அரசு செய்துள்ளது. மாநில அரசு தனது பங்குத் தொகையாக ரூ. 1,114 கோடியே 48 லட்சம் செலுத்த வேண்டும். தொடக்க, நடுநிலை மற்றும் உயர் நிலைப் பள்ளிகளுக்கான ஆண்டு பராமரிப்பு மானியம் வழங்குவ தற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. இந்த ஆண்டு புதியதாக 5 உண்டு உறைவிடப்பள்ளிகள் துவக்குவதற்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. புதியதாக தொடக்க, நடு நிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளை திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. மத்திய அரசு அனுமதி அளித்தால் தான் தமிழக அரசு புதிய பள்ளிகளை துவங்க முடி யும். மேலும் ஆசிரியர்களுக்கான சம்பளம் , பள்ளிக்கான செலவினம் போன்றவையும் மத்திய அரசின் நிதி யுதவியுடன் தான் செயல்படுத்தப்படு கிறது என்பது குறிப்பிடத்தக்கது.