ஈரோடு,நவ. 8- மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் வி.நடராஜன் குடும்ப நிதிய ளிப்பு மற்றும் படத்திறப்பு விழா வியாழனன்று ஈரோட்டில் நடை பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஈரோட்டில் நவம்பர் புரட்சி தின கருத்தரங்கம் மற்றும் மறைந்த மூத்த தோழர் வி.நடராஜன் குடும்ப நிதியளிப்பு படத்திறப்பு விழா நிகழ்ச்சி வியாழனன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.மாரிமுத்து தலைமை வகித்தார். தோழர் வி.நடராஜன் படத்தை கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.துரைராஜ் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் பங்கேற்று தோழர் வி.நடராஜன் குறித்து புகழுரை யாற்றினபர். இதைத்தொடர்ந்து தோழர் வி.நடராஜன் குடும்பத்தாரிடம் காட்சி சார்பில் திரட்டப்பட்ட ரூ.3 லட்சம் நிதியை அளித்தார். முன்னதாக, இந்நிகழ்ச்சியில், கட்சியின் ஈரோடு மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.பழனிச்சாமி, சி.பரம சிவம், ஆர்.கோமதி, எஸ்.சுப்பிரமணி யன், கே.ஆர்.விஜயராகவன், எஸ். முத்துசாமி மற்றும் மாவட்ட குழு உறுப் பினர்கள் உட்பட திரளானோர் பங்கேற்றனர். இதேபோல், தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழுவின் சார் பில் வி.நடராஜன் குடும்ப பாதுகாப்பு நிதியாக ரூ.25 ஆயிரத்து 400-ஐ மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற் குழு உறுப்பினர் கே.தங்கவேலுவிடம் அளித்தனர். இதில், அமைப்பின் மாவட்ட தலைவர் கே.எஸ்.இஸாரத் தலி, பொருளாளர் நடராஜன், நிர்வாகி கள் அப்துல் காதர் மற்றும் வி.விஜய குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.