சென்னை, ஆக.27- அரசு மேல்நிலைப்பள்ளி களில் காலியாக உள்ள, 2 ஆயிரத்து 449 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணி யிடங்களுக்கு, பள்ளி களே, தற்காலிக ஆசிரி யர்களை நேரடியாக நிய மித்துக்கொள்ள, பள்ளிக் கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், உயிரியல், வேதியியல், தாவ ரவியல், விலங்கியல், பொரு ளியல், இயற்பியல்,பொரு ளியல் போன்ற முக்கியப் பாடங்களில் 2 ஆயிரத்து 449 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆசிரி யர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க, பெற்றோர்-ஆசிரியர் கழகம் மூலம், அந்தந்த பள்ளி களுக்கு அருகில் உள்ள தகுதியான பட்டதாரி ஆசிரி யர்களைத் தேர்வு செய்து தற்காலிகமாக நியமித்துக் கொள்ள அரசுப்பள்ளி களுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை 5 மாதங்களுக்கு மட் டும் 2 ஆயிரத்து 449 தற்காலிக முதுகலைப் பட்டதாரி ஆசி ரியர்களை, மாதம் ரூ.10,000 தொகுப்பூதியத்தில் பள்ளி களே நேரடியாக நியமித்துக் கொள்ள அரசாணை வெளி யிடப்பட்டுள்ளது. 5 மாதங் களுக்கு தேர்வு செய்யப்ப டும் 2 ஆயிரத்து 449 ஆசி ரியர்களுக்கு தொகுப் பூதி யம் வழங்க 12 கோடியே 24 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி பள்ளிக்கல்வித்துறை அர சாணை வெளியிட்டு உள்ளது.