பாட்னா:
பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில், இடதுசாரிக் கட்சிகள், ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைமையிலான ‘மகா கூட்டணி’யில் இணைந்து போட்டியிட்டன. இதில், சிபிஐ (எம்எல்) கட்சி 12 இடங்களிலும், சிபிஎம், சிபிஐ கட்சிகள் தலா 2 இடங்களிலுமாக மொத்தம் 16 இடங்களில் வென்றுள்ளன. இது பீகாரில் இடதுசாரிகளுக்கு கிடைத்த முக்கியமானவெற்றியாகப்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், முன்கூட்டியே கூட்டணியை இறுதிப்படுத்தி இருந்தால், எம்.எல்மற்றும் பிற இடதுசாரிக் கட்சிகள் ஒட்டுமொத்தமாக 50 இடங்கள் வரை போட்டியிட்டிருக்க முடியும்; இது தேர்தல் முடிவுகளிலும் நல்ல விளைவுகளை ஏற்படுத்தி இருக்கும் என்று சிபிஐ (எம்எல்) பொதுச்செயலா ளர் தீபங்கர் பட்டாச்சார்யா கூறியுள்ளார்.
“தேர்தலின் இறுதிமுடிவைக் கழித்துவிட்டுப் பார்த்தால், பீகாரில் மகாகட்பந்தன் கூட்டணி நம்பிக்கை அளிக்கிறது. தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதில் பீகார் மக்கள்முக்கியமான வெற்றியைப் பெற்றுள்ளனர்” என்று தெரிவித்துள்ள பட்டாச்சார்யா, நிதீஷ்குமாருக்கு எதிராக பீகார் மக்கள் தங்கள்கோபத்தை வெளிப்படுத்தி உள்ளதாகவும், அந்த கோபத்தில் பாஜக-வுக்கும் சரிபாதி பங்கு உள்ளது என்றும் கூறியுள்ளார்.மேலும், “தீய ‘இனவாத’ பிரச்சாரத்தைத் தவிர, வேறு எந்த ‘மோடி காரணியும்’ (modi factor) பீகார் வெற்றிக்கு காரணம் இல்லை” என்று கூறியிருக்கும் அவர்,“பாஜக-வின் இனவாதப் பிரச்சாரம், தேர்தலின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களில்தான் சில விளைவுகளை ஏற்படுத்தியதாக தெரிகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.“70 இடங்களில் போட்டியிட்ட காங்கிரசுக்கு பல இடங்களில் அமைப்பு பலம் இல்லை என்பது தனது கருத்து” என்றும் தீபங்கர் பட்டாச்சார்யா பேட்டியில் பதிவு செய்துள்ளார்.