பாட்னா:
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அம்மாநிலத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.இந்நிலையில், தர்பங்காவில் உள்ள குஷேஷ்வர் அஸ்தான், வால்மீகி நகர் உள்ளிட்ட இடங்க
ளில் நடைப்பெற்ற கூட்டங்களில் அவர் பேசியிருப்பதாவது:
பிரதமர் மோடி மற்றும் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் ஆகியோர் மாநிலத்தின் வளர்ச்சிக்கு எதையும் செய்யவில்லை. பீகாரில்போதுமான வேலை வாய்ப்புக் கள், வசதிகள் இல்லை என்றால், அது மக்களின் தவறு அல்ல. பீகார் முதல்வர் மற்றும் இந்த நாட்டின் பிரதமரின் தவறு.மோடியும், பீகார் முதல்வர்நிதிஷ் குமாரும் வெளிநாடுகளைப் பற்றி பேசுகின்றனர். ஆனால், நம் நாட்டில் நிலவும் வேலையின்மை உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து பேசுவதில்லை. இதனால் பீகார், பஞ்சாப்மாநிலங்களில் உள்ள இளைஞர் களும் விவசாயிகளும் சிறு கடைக்காரர்களும் அவர்கள் மீதுகோபத்தில் உள்ளனர்.2006-ஆம் ஆண்டு பீகாரில் மண்டிமுறை ஒழிக்கப்பட்டது. நிதிஷ் குமார் பீகாரில் 2006-ஆம் ஆண்டு செய்ததைத்தான், தற்போது 3 வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்து, நரேந்திர மோடி பஞ்சாப், ஹரியானா எனநாடு முழுவதும் செய்து கொண்டிருக்கிறார்.
மோடி கொண்டுவந்த பணமதிப்பு நீக்கம், பொதுமுடக்கம் ஆகியவற்றின் நோக்கமே சிறு தொழில்கள், சிறு விவசாயிகள், வர்த்தகர்களை அழிப்பதுதான். பொய் பேசுவதில் பிரதமர் மோடியை யாரும் மிஞ்ச முடியாது. தற்போது 2 கோடி பேருக்குவேலை தருவேன் என்று பிரதமர் மோடி சொல்வது இல்லை. ஏனென்றால் அவர் பொய் சொல்கிறார் என்பதை மக்கள் உணர்ந்துவிட்டார்கள். அதையும் மீறி, 2 கோடி பேருக்கு வேலை என்றுமோடி வாய் திறந்தால், மக்களேதிரண்டு அவரை விரட்டியடிப் பார்கள். இவ்வாறு ராகுல் பேசியுள்ளார்.