tamilnadu

img

உ.பி.யைத் தொடர்ந்து பீகாரிலும் ஆபத்தான அரசியல் .... ஒரு முஸ்லிம் எம்எல்ஏ கூட இல்லாத பாஜக - ஜேடியு கூட்டணி அரசு...

பாட்னா:
உத்தரப்பிரதேசத்தில் 2017-ஆம்ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள 403தொகுதிகளில், 312 தொகுதிகளை கைப்பற்றி பாஜக ஆட்சி அமைத் தது. ஆனால், பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ-க்களில்ஒருவர் கூட முஸ்லிம் இல்லை. 130 தொகுதிகளில் வெற்றி - தோல்வியை நிர்ணயிக்கும் வாக்காளர்களாக முஸ்லிம்கள் இருந்தும், ஒரு முஸ்லிம் வேட்பாளரைக் கூட பாஜக நிறுத்தவில்லை. எனினும் அதிகாரத்தைக் கைப்பற்றியது.

குறிப்பிட்ட மக்கட் பிரிவினரை ஒதுக்கி வைக்கும் இந்த ஆபத்தான இந்துத்துவ அரசியலை தற்போது பீகார் தேர்தலிலும் பாஜக அரங் கேற்றியுள்ளது. பீகாரில் 17 சதவிகிதமுஸ்லிம்கள் இருந்தும், ஒரு முஸ்லிம் எம்எல்ஏ கூட இல்லாத ஆட்சியைபாஜக கூட்டணி அமைத்துள்ளது.பாஜக தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணியில், ஐக்கிய ஜனதாதளம் (JDU), பீகார் முன்னாள்முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சியின் ‘இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா’ (HAM) மற்றும் விகாஷீல் இன்ஸான்கட்சி (VIP) ஆகியவை இடம்பெற்றிருந்தன. இந்தக் கட்சிகளில் பாஜக உள்ளிட்ட மூன்று கட்சிகள், ஒரு முஸ்லிமைக் கூட வேட்பாளராக நிறுத்த வில்லை. இதனால் ஒரு எம்எல்ஏ கூட இந்தக் கட்சிகளில் முஸ்லிம் இல்லை. ஜேடியு மட்டும் 11 பேரை நிறுத்தி இருந்தது. ஆனால், அவர்களில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை.

இதனால், சுதந்திர இந்தியாவில், முதன்முறையாக, ஒரு முஸ்லிம் எம்எல்ஏ கூட இல்லாமல் பீகாரில் ஒரு அரசாங்கம் அமைந்துள்ளது. அதற்கு நிதிஷ்குமார் முதல்வராக பதவியேற்றுள்ளார்.ஆர்ஜேடி சார்பில் 8 பேர், காங்கிரஸ் சார்பில் 4 பேர், இடதுசாரிக் கட்சிகள் சார்பில் ஒருவர் என ராஷ்ட்ரியஜனதாதளம் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணியில் (மகா கூட்டணி), 13 முஸ்லிம்கள் எம்எல்ஏ-க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள் ளனர். பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஒருவர், ஓவைசியின் மஜ்லிஸ்கட்சியின் சார்பில் 5 பேர் என மூன்றாவது அணியிலும் 6 முஸ்லிம்கள் எம்எல்ஏ ஆகியுள்ளனர். ஒட்டுமொத்தமாக எதிர்க்கட்சிகள் தரப்பில் 19 பேர் எம்எல்ஏ ஆகியிருந்தாலும், (கடந்த 
ஆண்டு 24 பேர் எம்எல்ஏ-வாகி இருந்தனர்) ஆளும் கூட்டணியில் ஒருவர்கூட இல்லை என்பதுதான் இங்கே முக்கியமானது.