tamilnadu

img

சென்னை: உள்ளும் புறமும் கள நிலவரம் என்ன? - எஸ்.கண்ணன்

பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு அறிவித்து 90 நாள்கள் நிறைவு பெற்றுள்ளது. பொதுமுடக்கம் 1 துவங்கி பல கட்ட அறிவிப்பு வெளிவந்த போதும், இந்தியாவில், கொரோனா பாதிப்பின் தாக்கம், குறைவதற்கு பதிலாக, அதிகரித்து வருகிறது. மோடி  குறிப்பிட்ட ‘வளர்ச்சியின்’ அடையாளம் குஜராத், பொரு ளாதார தலைநகரம் மும்பை, தேசத் தலைநகர் தில்லி, இந்தியாவின் டெட்ராய்ட் சென்னை ஆகிய அனைத்தும் கொரோனா பாதிப்பில் மூச்சுத் திணறிக்கொண்டு இருக்கின்றன. உயிரிழப்பும் 15 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. உலகில் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 4 வது இடத்திற்கு வந்துவிட்டது.

வளர்ந்த முதலாளித்துவ நாடுகளும், வளரும் நாடுகளின் முக்கிய பெரு நகரங்களும் இவ்வாறு மூச்சுத் திணறுவது, இரண்டு அடிப்படை விசயங்களைச் சுட்டுகிறது. ஒன்று, முதலாளித்துவ வளர்ச்சியில் உள்ள ஓட்டைகளை அம்பலப்படுத்துகிறது; மற்றொன்று, நகரத்தில் உள்ள வசதியானவர்கள் மற்றும் வசதியற்ற அன்றாடம் உழைத்து வாழ்பவர்கள் மீது அரசு வெளிப்படுத்தும் பாரபட்சமான அணுகுமுறை. இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் சிகிச்சை பெறும் அரசு மருத்துவமனைகள்; மற்றது தனியார் மருத்துவமனைகள். அதேபோல் தனிமைப்படுத் தப்படும் வளாகங்கள் ஒன்று கல்லூரி வளாகங்கள்; மற்றொன்று சற்று வசதியான மையங்கள் இத்தகைய பார பட்சம் - இடைவெளி மிக அதிகமாக இருப்பதை அரசிடம் சுட்டிக்காட்டுவதும், ஓட்டைகளை அடைக்கும் நிர்ப்பந் தத்தை தருவதும் அவசியமாகிறது.

கேட்பாரற்ற நிலையும்  மார்க்சிஸ்ட் கட்சியின் தலையீடும்

சென்னை நகரில்  உள்ள சில அரசு மருத்துவமனை யின் வார்டுகள் பிரச்சனைகள் இருந்த போதும், ஓரளவு பராம ரிக்கப்படுவதாக தெரிகிறது. ஆனால் புறநகர் பகுதிகளாக இருக்கும் செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை, திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனை ஆகியவை செயலிழந்து வருகின்றன. அண்மையில் திருவள்ளூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் அதிகாலை 4 மணிக்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட செய்தி பெரும் அதிர்ச்சி தரத்தக்கதாக இருந்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட தலைமை இது குறித்து விசாரித்து, மாவட்ட ஆட்சியரிடம் இதர நோ யாளிகளுக்கு தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை வலி யுறுத்தியது. அவரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். ஆனால் விசாரித்து அறிந்த உண்மை நிலை, மேலும் மேலும் அதிர்ச்சியை அதிகரிப்பதாக உள்ளது. மேற் குறிப்பிட்ட நோயாளிகளின் வார்டுக்கு உணவு முறையாக தரப்படுவதில்லை. கபசுர குடிநீர் வைத்து விட்டு செல்லப் படுவதாக சொல்லப்படுகிறது. மருத்துவர்கள் முறையாக வருகை தந்து, பரிசோதிப்பதில் குறைபாடுகள் உள்ளது. இத னால் நோயாளிகள், இருக்கும் நோயை மேலும் அதிகப் படுத்திக் கொள்ளும் மன உளைச்சலுக்கு ஆளாவதாகத் தெரிகிறது.

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவம னையில், ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வரு கின்றனர். வளாகத்தின் மூன்றில் ஒரு பகுதி மறைப்புகள் கொண்டு மறைக்கப்பட்டு இருக்கிறது. விசாரித்த போது கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் பகுதி என குறிப்பிட்டனர். இங்கும் உணவு, கபசுர குடிநீர் ஆகியவை வழங்கப்படுதலும், சுகாதாரப் பராமரிப்பும் மிக மிகத் தாமத மாக நடந்து வருகிறது. ஒரு நோயாளி, காலை உணவு வழங்கவில்லை என்பதனால், தானே வெளியில் வந்து, அதாவது சுமார் அரை கி.மீ தொலைவு நடந்து, ஓட்டலில் உணவு பார்சல் பெற்றுக் சென்றிருக்கிறார். சிலர், ஓட்டல் ஊழியர்கள் மூலம் வார்டு வாசலுக்கு தருவித்து உணவு உட்கொள்வதாக கூறினர்.

அதேபோல் மருத்துவமனையில் நோயாளியின் உடல் நிலை மற்றும் அறிகுறிகளைப் பொறுத்து, அவர்கள் 5 முதல் 7 நாள்களில் தனிமைப்படுத்திக் கொள்ளும் மையங்க ளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இவை பெரும்பா லும் கல்லூரிகளாக உள்ளன. தாம்பரம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் தொழிலாளி ஒருவர், “நான் சர்க்கரை மற்றும் பிரசர் பாதிப்பு களும் கொண்ட நபர். என்னைப் போல் வேறு சிலரும் உள்ள னர். இங்கு நூறு பேர் அளவில் இருக்கிறோம். இங்கு ஆம்புலன்ஸ் இல்லை, பரவாயில்லை, 108 க்கு தொடர்பு கொண்டு உயிர் போவதற்குள் வரவைத்து விடலாம். ஆனால் மருத்துவர் வருகை முறையாக இல்லை. மருந்து கள் வழங்கப்படுவதும் முறையாக இல்லை”, என ஆதங்கப் பட்டார். இவரின் முறையீட்டை, மாவட்ட ஆட்சியர் மற்றும் கூடுதல் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆகிய இருவரிடமும் முறை யிட்டு, சிலவற்றை ஒழுங்குபடுத்த முடிந்தது. ஆனால் இதுபோல் தகவல் பெற முடியாத நோயாளிகளும், பகுதிக ளும் சென்னையை சுற்றி அதிகம் உள்ளதை மாநில அரசும், அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை.

அரசும், முன்களப் பணியாளர்களும் 

மார்ச் 22 அன்று மக்கள் ஊரடங்கை அறிவித்த பிரதமர் மோடி, மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள் மற்றும் பல ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதத்தில், மாலை 5 மணிக்கு கைதட்டுமாறு கேட்டுக் கொண்டார். தமிழக முதல்வரும் கூட்டமாக தனது வீட்டு வாயிலில் நின்று கைதட்டினார். இதைத் தொடர்ந்து இது போன்ற முன்கள பணியாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதத்திலான நடவடிக்கைகள் குறித்து அறிவித்தார். மரணம் நிகழ்ந்தால் 50 லட்சம் ரூபாய் நிவாரணம் உள்ளிட்டு பல அறிவிப்புகள் அதில் இருந்தது. கைதட்டியது போல் அறிவிப்பும் பலன் தரவில்லை.

அண்மையில் வருவாய்த் துறை ஊழியர்கள் தங்கள் துறையை சார்ந்த ஊழியர் ஒருவர் மரணத்தை தழுவிய போதும் அரசு குறிப்பிட்ட 50 லட்சம் ரூபாய் வழங்கப்பட வில்லை எனக் கண்டித்து அடையாளப் போராட்டத்தை நடத்தினர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் பலர் மரணம் அடைந்துள்ள னர். இவர்கள் சமூகத்தின் இதர பகுதி மக்கள் பாதிக்கப் படக் கூடாது என்பதற்காக களப் பணியில் நின்று  போராடு பவர்கள். பொது விநியோக ஊழியர்கள், மின் ஊழியர்கள், காவலர்கள், மருத்துவர்கள் இப்படி பலர் இறந்த போதும், இந்த அரசு நிவாரண அறிவிப்புகளை அமலாக்குவதில் தாமதம் செய்கிறது. இது தன்னை அர்ப்பணித்து மக்களின் உயிர் காக்கும் கவசமாக உள்ள முன்களப் பணியாளர்க ளை அவநம்பிக்கை கொள்ளச் செய்யும் என்பதை அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்.

மருத்துவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் கவச உடை கள் (Personal protective equipment) வாங்குவதிலும், விநி யோகிப்பதிலும் போதாமை உள்ளது. செவிலியர், சுகாதாரப் பணியாளர் ஆகியோருக்கும் இதே நிலைதான். சென்னை மாநகராட்சியின் சுகாதாரப் பணியாளர்கள் சிலர் இறந்த நிலையில், பலர் நோய்த் தொற்று காரணமாக தனிமைப் படுத்தப்பட்ட பின்னரும், எடுக்கப்பட்ட நடவடிக்கை பூஜ்ஜியம் என்பதே உண்மை. சி.ஐ.டி.யு வின் செங்கொடி சங்கம்  கையுறை, சோப்பு மற்றும் இதர தளவாடப் பொருள்கள் கேட்டு சென்னை மாநகராட்சி நிர்வாகத்தை முற்றுகை யிட்டனர். ஆனாலும் ஆணையர் பிரகாஷ், பிரகாஷமாக உள்ளாரே தவிர, பிரச்சனைகள் தீரவில்லை.

செங்கல்பட்டு நகராட்சியில் உள்ள தூய்மைப் பணியா ளர்கள் மூன்று ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர். இரண்டு முறை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து முறை யிட்டு உள்ளனர். அவ்வப்போது நடவடிக்கை எடுப்பதுடன் சரி. முழுமையாக எந்த நடவடிக்கையும் இல்லை. செங்கல் பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், குறிப்பாக கொரோனா வார்டில் பணிபுரிய சுகாதாரப் பணியாளர்கள் இல்லை என்ற நிலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர் என்ற காரணத்திற்காக சிஐடியு ஊழியர்களை, கொரோனா வார்டில் பணிபுரியுமாறு நகராட்சி ஆணையர் கட்டாயப்படுத்தி பழிவாங்கியுள்ளார்.  பணியாளர்கள் வேலை செய்யத் தயார்; உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை, உபகரணங்களை, தரவேண்டும் என தொடர்ந்து போராடி வருகின்றனர். தற்போது நகராட்சி ஆணையருக்கும் சில ஊழியர்களுக்கும் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்களப் பணி யாளர்களைப் பாதுகாப்பதில் அதிகாரிகளும் அரசும் தீவிர கண்காணிப்பை உறுதி செய்ய வேண்டும்.

தடுப்பு நடவடிக்கைகளும்,  சமூக இயக்கங்களும்

கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு உள்ளாட்சி நிர்வாகங்களை எந்த அளவிற்கு பயன்படுத்தியுள்ளது என்பதும் கேள்விக்குறியே. நோய்த் தொற்று அதிகம் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகள் உள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகம் உள்ளது. இவர்களை பயன்படுத்துவதில் மாவட்ட ஆட்சியர் சிறப்பு நடவடிக்கை எதுவும் எடுத்ததாக தெரியவில்லை. சென்னை புறநகர் பகுதிகளில் மாவட்ட ஊராட்சி நிர்வாகம், பயன்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். பொறுப்பான அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை மாநகராட்சியில் அவ்வப்போது தலையீடு செய்தும், உரிய வகையில், கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்களிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு சார்பில், தடுப்பு  நடவடிக்கைகளில் மக்கள் அமைப்பு களை பயன்படுத்துவது குறித்து ஆலோசனைகளை நேரடியாக வழங்கியுள்ளோம்.

மேற்குறிப்பிட்ட மூன்று மாவட்டங்களிலும் தொழிற் சாலைகள் நிரம்பியுள்ளன. நோய்த் தொற்று கண்டறி யப்பட்ட நிலையில், நோக்கியா சொல்யூசன்ஸ், ஹூண்டாய், காம்ஸ்டார், பி.எம்.டபுள்யு, யமஹா, பெர்பட்டி  நிர்வாகங்க ளிடம் தொழிற்சங்கம் தொடர்ந்து நிர்பந்தம் அளித்த பின்னர், கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் சில மேற்கொள் ளப்பட்டுள்ளன.  மேலும் பல ஆலைகளில் இது வெளிவரா மல் ‘ரகசியம்’ காக்கப்படுகிறது. நோய் தடுப்பு சட்டம் 2005 படியோ, அல்லது பேரிடர் மேலாண்மை நடவடிக்கைப் படியோ, மாவட்ட நிர்வாகங்கள் போதுமான நடவடிக்கை களை எடுக்கவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு அமைப்புகள் மாவட்ட ஆட்சியரிடம், ஆலை  நிர்வாகங்கள், தொழிற்சங்கப் பிரதிநிதி; தொழிற்சங்கம் இல்லாத ஆலைகளில் தொழிலாளர் பிரதிநிதி ஆகியோ ரைக் கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும்; தொழிலாளர் மற்றும் ஆலை நிர்வாகம் உள்ளடக்கிய நோய்த் தடுப்பிற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்யும் கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் செய்ய வில்லை. ஆனால் எந்த நேரமும் அதிகாரிகள் ஓடிக் கொண்டே உள்ளனர்.  இதனால் பயனில்லை என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தடுப்பு மருந்து நிறுவனம்

செங்கல்பட்டு நகரில் திருமணி பகுதியில் 600 கோடி செலவில் கட்டமைக்கப்பட்ட மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான, ஹிந்துஸ்தான் பயோடெக் லிட்., என்ற நோய்  தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனம் உள்ளது. இதை செயல் படுத்த வேண்டும். 100 க்கும் மேற்பட்ட நுண்ணுயிர் அறி வியல் அறிஞர்கள் மற்றும் ஊழியர்களின் செயல்பாட்டைப் பயன்படுத்துவது, கொரோனா நோய் தொற்று பரிசோதனை செய்வது, சானிட்டைசர் தயாரிப்பது ஆகியவற்றிற்கு இந்த  ‘தயார் நிலைக்’ கட்டமைப்பு பயன்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் பிரதம ரையும், சுகாதாரத் துறை அமைச்சரையும் சந்தித்து வலி யுறுத்தியுள்ளார். மாநில அரசையும் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிடியூட்  தற்போது பயன்படத் துவங்கியுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு எச்பிஎல் நிறுவனத்தையும் பயன்படுத்தி னால், சென்னை புறநகர் பகுதியில், ஏற்பட்டுள்ள நெருக்கடி களை சரி செய்ய முடியும்.

பிரதமர் மற்றும் பாஜக அரசு போல், தமிழக அரசும் பேசிக் கொண்டே இருக்காமல் இது போன்ற ஆலோசனை களை செவி கொடுப்பதும் செயல்படுவதும் நல்லது. 

கட்டுரையாளர் : மாநிலக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

 

;