புதுதில்லி:
பொருளாதாரம் மந்தநிலையில் இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கிஅதிகாரபூர்வமாகவே ஒப்புக்கொண்டி ருக்கிறது. மோடி அரசின் கொள்கைகளால் மிகப்பெரும் பேரழிவிற்குள் நாட்டின் பொருளாதாரம் தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு பொதுச்செல வினங்களை அதிகரித்து, மக்களை பசி பட்டினியிலிருந்து காத்திடவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:இந்திய ரிசர்வ் வங்கி, இந்தியாவின் பொருளாதாரம் கடுமையாக மந்தநிலையில் இருப்பதாக இப்போது அதிகாரபூர்வமாகவே உறுதிப்படுத்தி இருக்கிறது. அது மேலும், “இந்தியா தன்னுடைய வரலாற்றில் முதன்முறையாக 2020-21 இன் முதல் அரையாண்டில் ஒரு தொழில்நுட்ப மந்தநிலைக்குள் நுழைந்திருக்கிறது,” என்றும் கூறியிருக்கிறது.மொத்த உள்நாட்டு உற்பத்தி 23.9 சதவீத அளவிற்கு ஏப்ரல்-ஜூன் காலாண்டில் வீழ்ச்சியடைந்தபின்பு, இப்போது 2020 செப்டம்பர் காலாண்டு முடிவில் 8.6 சதவீதம் மேலும் வீழ்ச்சி அடைந்திருக்கிறது.மொத்த உள்நாட்டு உற்பத்திதொடர்ந்து சுருங்கிக்கொண்டி ருப்பது, நம் கோடானுகோடி மக்களின் வாழ்க்கையையும், வாழ்வாதாரங்களையும், வறுமை, பசி,பஞ்சம், பட்டினி என மோசமானநிலைக்குத் தள்ளிக்கொண்டிருக் கிறது. இப்போதுள்ள நிலை என்பது வாழ்வாதாரங்களின் மீதான நெருக்கடி அல்ல. இது உயிர் வாழ்வதற்கான நெருக்கடியாகும்.இந்தியப் பொருளாதாரம், மோடி அரசாங்கத்தின் கொள்கைகளால் மிகப்பெரிய அளவில்பேரழிவிற்குள் தள்ளப்பட்டிருக் கிறது. இதனைச் சரிசெய்திட வேண்டுமானால், உள்நாட்டுத்தேவைகளுக்கு இட்டுச்செல்லக் கூடிய விதத்தில் பெரிய அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு வழிவகுக்கும் விதத்தில் நாட்டில் அதிக அளவு தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகளைக் கட்டி எழுப்பிட, கணிசமான அளவிற்குப் பொது முதலீடுகளை உயர்த்திட வேண்டும். எந்தவொரு பொருளாதாரப் புதுப்பித்தலைத் தொடங்குவதற்கும் இது ஒன்றே வழியாகும்.
நாட்டின் சொத்துக்கள் சூறையாடப்படுவது நிறுத்தப்பட வேண்டும். தேர்தல் நிதிப் பத்திரங்கள் மற்றும் பிரதமரின் தனியார் நிதியம் மூலமாக அதிர்ஷ்டத்தைக் குவிப்பதற்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும். இந்தப் பணம்முழுவதும் பொதுச் செல வினத்திற்குப் பயன்படுத்துவது அதிகரிக்கப்பட்டு, எந்தவொரு இந்தியரும் பசி-பஞ்சம்-பட்டினிக்கு ஆளாகாது தடுக்கப்படுவதை உத்தரவாதப்படுத்திட வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. (ந.நி.)
மேலும் விபரம் 6 ஆம் பக்கத்தில்