புதுதில்லி, செப்.14- வாகன விற்பனை வீழ்ச்சி அடைந்தி ருப்பதை தொடர்ந்து, நடப்புக் காலாண்டில், 8 முதல் 17 நாட்கள் வரை உற்பத்தியை நிறுத்த உள்ளதாக மகேந்திரா அண்டு மகேந்திரா நிறு வனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று மகேந்திர அண்டு மகேந்திரா (mahindra and mahindra). இந்நிறுவனம் 2019-20 நிதியாண்டின் நடப்பு காலாண்டில் விற்பனைக்கு ஏற்ப உற்பத்தி யைக் கட்டுக்குள் வைத்திருக்க 17 நாட்கள் வரை உற்பத்தி நிறுத்தப் போவதாக கூறி யுள்ளது. முன்னதாக ஆகஸ்ட் 9-ஆம் தேதி, ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 8 முதல் 14 நாட்கள் வரை மட்டுமே உற்பத்தி நிறுத்தப்படும் எனக் கூறியிருந்தது. ஆனால், வெள்ளிக்கிழமை யன்று வெளியிட்ட தகவலில் கூடுதலாக மூன்று நாட்கள் உற்பத்தி நிறுத்தப்படலாம் என குறிப்பிட்டுள்ளது. மகேந்திரா நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனையானது, கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதலாவது காலாண்டில் 26 சத விகிதம் குறைந்துள்ளது. வருவாயும் ஜூன் 2019 காலாண்டில் 4 சதவிகிதம் குறைந்து 12 ஆயிரத்து 997 கோடி ரூபாயாக வீழ்ந்துள் ளது. மற்றொரு வாகன உற்பத்தி நிறுவன மான இந்துஜா குழுமத்தின் அசோக் லேலண்ட் நிறுவனமும் தனது ஆலைகளில் 16 கட்டாய விடுமுறை நாட்களை அறி வித்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.