நேபாளத்தில் டிப்பர் லாரி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் மாயமாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியாவிலிருந்து திரும்பிய 50 நேபாள நாட்டினருடன் இன்று டிப்பர் லாரி ஒன்று காலிகொட் மாவட்டத்தில் உள்ள ரஸ்கொட் நகராட்சிக்கு தனிமைப்படுத்துதல் முகாமிற்கு சென்று கொண்டிருந்தது.
அப்போது லாரி கர்னலி நெடுஞ்சாலையில் லலிகாட் என்ற பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து கர்னலி ஆற்றில் கவிழ்ந்தது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து மீதமுள்ளவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இதைத்தொடர்ந்து விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.