போகோஹராம் தீவிரவாதிகளின் பிடியில் இருந்த நைஜீரிய 900 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்று ஐக்கியநாடுகள் சபை தெரிவித்துள்ளது.
நைஜீரியாவில் அரசுக்கு எதிராக போகோஹராம் தீவிரவாதிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அவ்வப்போது போகோஹராம் தீவிரவாதிகள் பள்ளி கல்லூரிகளில் மாணவர்களை கடத்தி செல்கின்றனர். அவ்வாறு கடத்தப்படும் சிறுவர்கள் தற்கொலைப்படை தாக்குதல், கொலை மற்றும் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் போகோஹராம் தீவிரவாதிகளிடம் இருந்து 106 சிறுமிகள் உட்பட மொத்தம் 894 பேர் விடுவிக்கப்பட்டு உள்ளதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டு தீவிரவாதிகளின் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக மக்கள் கூட்டு பணிக்குழு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு மூலமாக நூற்றுக்கணக்கான சிறுவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். இந்த அமைப்பு மூலமாக 894 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இது வரை மொத்தம் 1727 சிறுவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மைதுகுரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நைஜீரியாவிற்கான யுனிசெப் தலைவர் முகமத் பால் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.