tamilnadu

img

ஒரே அறையில் தங்கிய 8 இந்தியர்கள் மூச்சுத் திணறி உயிரிழப்பு

நேபாளத்தில் ஒரே அறையில் தங்கிய 8 இந்தியர்கள் மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
நேபாளத்திற்கு சுற்றுப்பயணம் செய்த  15 பேர்  மக்வான்புர் மாவட்டம் டாமன் பகுதியில் உள்ள ஹோட்டலில் 2 அறைகளை எடுத்து தங்கி உள்ளனர். இதில் ஒரு அறையில் தங்கி இருந்த 8 பேர் மூச்சுத் திணறி நினைவிழந்த நிலையில் இருந்தனர். இதைக்கண்ட ஹோட்டல் ஊழியர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் 8 பேரும் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள்  தெரிவித்துள்ளனர். 
இச்சம்பவம் குறித்து மக்வான்புர் காவல்துறை கண்காணிப்பாளர் சுஷில் சிங் ரத்தௌர் கூறுகையில், அவர்களது அறையை வெப்பநிலையில் வைத்திருக்க உதவும் கேஸ் ஹீட்டரில் இருந்து வெளியான வாயுவால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு 8 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. மேலும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.