முகக்கவசம் அணியாத பல்கேரிய பிரதமருக்கு 13 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் அந்நாட்டு மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பல்கேரியாவின் பிரதமரான பொய்க்கோ போரிசோவ் நேற்று அந்நாட்டின் ரிலா மனொஸ்டோரி நகரில் உள்ள ஒரு தேவாலயத்திற்கு சென்றார். அங்கு பிரார்த்தனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். ஆனால், அப்போது அவர் முகக்கவசம் அணியவில்லை. மேலும், அவருடன் சென்ற அதிகாரிகள் பலரும், பத்திரிக்கையாளர்களும் முகக்கவசம் அணியாமல் விதிகளை மீறியுள்ளனர்.
இதையடுத்து, கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற அமலில் உள்ள உத்தரவை மீறி முகக்கவசம் அணியாமல் பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் பொய்க்கோ பொரிசோவ் உள்பட அதிகாரிகள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாக பல்கேரிய சுகாதாரத்துறை அமைச்சர்தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், முகக்கவசம் அணியாமல் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் உள்பட அனைவருக்கும் தலா 300 லிவ்ஸ் (இந்திய மதிப்பில் 13 ஆயிரம் ரூபாய்) அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்தார்.