பேராசிரியர் சுப.வீரபாண்டியனின் நாக்கை அறுப்போம் என்று நெல்லையில் பொது மேடையில் பாஜக நிர்வாகி திமிராக பேசி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிழக்கு பதிப்பக உரிமையாளரும், வலதுசாரி ஆதரவாளருமான பத்ரி சேஷாத்ரி, முன்னாள் தமிழக முதல்வர் அறிஞர் அண்ணாவை முட்டாள் என விமர்சித்து ட்வீட் செய்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பேசியது அதைத்தொடர்ந்து திமுக மேடை ஒன்றில் பேசிய திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், பத்ரி சேஷாத்ரியின் கருத்தைக் கண்டித்திருந்தார். அண்ணா, கருணாநிதி பற்றி எவன் ஒருவன் தவறாக பேசினாலும் மரியாதை கொடுக்க முடியாது, என்ற வகையில் பேசியிருந்தார்
மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டி தமிழக பாஜக சார்பில் நேற்று தமிழகத்தில் 60 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நெல்லை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு பாஜக மாவட்ட தலைவர் தயா சங்கர் தலைமை தாங்கினார். பாஜக சட்டசபை குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னாள் பாஜக நெல்லை மாவட்ட தலைவர் மகாராஜன் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் "அண்ணாவை இடியட் என்று கூறியவரை சுப.வீரபாண்டியன் கடுமையாக மிரட்டுகிறார். அது அவரது கருத்து, அதை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ளலாம். ஆனால், ஒட்டுமொத்த சமூகத்தையே இழிவுபடுத்தும் வகையில் பூணூல் அறுப்பதாக சொன்னால், நீயாவது பூணூல் மட்டும் தான் அறுப்ப.. நான் உன் நாக்கை இழுத்துப் பிடித்து அறுப்பேன். கீழேயும் இழுத்து பிடித்து அறுப்போம் நாங்க அப்படி ஆளு உனக்கு தெரியாது. திருநெல்வேலிக்கு நீ வந்து பாரு.. ரெண்டு பக்கமும் அறுக்கிறோமா இல்லையானு பாரு.." என்று ஆபாசமாக ஒருமையில் பேசினார். மகாராஜன் பேசும்போது, அவருக்கு அருகிலேயே நின்றிருந்த பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் அவரை அதிர்ச்சியுடன் பார்த்தபடி அமைதியாக இருந்தார்.
சுப.வீரபாண்டியன் குறித்து ஆபாசமான வகையில் மிரட்டல் விடுக்குமாறு பாஜக தலைவர் மகாராஜன் பேசிய இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேடை நாகரீகம் சிறிதும் இல்லாமல் கீழ்த்தரமாகப் பேசிய பாஜக நிர்வாகி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.