tamilnadu

img

நெல்லை மாவட்டத்திற்கு அரையாண்டு தேர்வு தேதிகள் அறிவிப்பு!

நெல்லையில் பெருமழை வெள்ளத்தால் ரத்து செய்யப்பட்ட பள்ளி அரையாண்டு தேர்வுகளுக்கான திருத்திய கால அட்டவணை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் வெளியிடப்பட்டுள்ளது.

ரத்து செய்யப்பட்ட பள்ளி அரையாண்டு தேர்வு ஜனவரி 4ஆம் தேதி தொடங்குகிறது.

இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் பெருமழையால் ரத்து செய்யப்பட்ட அரையாண்டு தேர்வுகளுக்கான திருத்திய கால அட்டவணை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு கடந்த வாரம் நடைபெற்று முடிந்தது.

நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடந்த 17-ஆம் தேதி முதல் 3 நாட்கள் தொடர்ச்சியாகக் கொட்டிய கனமழை காரணமாக மேற்கண்ட மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பாடங்களுக்கு மட்டும் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.

அதன்படி நெல்லை மாவட்டத்தில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அறிவியல், கணக்கு, உடற்கல்வியியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை முடிந்து ஜனவரி 2ஆம் தேதிக்கு பிறகு ரத்து செய்யப்பட்ட அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் பெருமழையால் ரத்து செய்யப்பட்ட அரையாண்டு தேர்வுகளுக்கான திருத்திய கால அட்டவணை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி வரும் ஜனவரி 4-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை 6-10ஆம் வகுப்புகளுக்கு விடுபட்ட தேர்வுகள் நடைபெறும் என்றும், ஜனவரி 4 முதல் 11 ஆம் தேதி வரை பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு விடுபட்ட அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.