tamilnadu

img

அஞ்சலி மற்றும் படத்திறப்பு விழா

கோவை மாவட்ட முன்னாள் செயலாளரும், முன்னாள் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான  கே.சி.கருணாகரன் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயற்குழு உறுப்பினரும், திருப்பூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.தங்கவேல் மற்றும் கூடலூர் இடைக்கமிட்டி உறுப்பினரும், விவசாயிகள் சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பினருமான கே.வேலாயுதன் ஆகியோரது படத்திறப்பு நிகழ்ச்சியும், நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள கட்சியின் இடைக்குழு அலுவலகத்தில் நடைப்பெற்றது.  இடைக்குழு செயலாளர் எம்.ஏ‌.குஞ்ஞிமுகமது தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் வி.ஏ‌.பாஸ்கரன், மாவட்டச் செயற்குழு  உறுப்பினர் என்.வாசு, ஏ.யோகண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.