tamilnadu

நீலகிரியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு முதல் பலி

உதகை, ஜூலை 3- நீலகிரியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக் கப்பட்ட நபர் உயிரிழந்த தால் அம்மாவட்ட மக்கள் அச்சமடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் பர வல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உதகை கிரீன் பீல்டு பகுதியைச் சேர்ந்த அப்துல்காதர்(66) என்ற முதியவர் கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப் பட்டு கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பல னின்றி வியாழனன்று அவர் உயிரிழந்தார். இது நீலகிரி மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றினால் ஏற் பட்ட முதல் உயிரிழப்பா கும். நீலகிரியில் கொரோனா நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலை யில், ஒருவர் உயிரிழந்த சம்ப வம்  மாவட்ட மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள் ளது.

;