tamilnadu

ஊருக்குள் புகும் கரடி கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை

உதகை, செப். 4 - ஊருக்குள் புகும் கர டியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர். நீலகிரி மாவட்டம், உதகை அருகில்  உள்ள தலைகுந்தா மட்டம், திரு வள்ளுவர் நகர் விநாயகர் கோவில் அருகில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக  கரடி ஒன்று சுற்றி வருகிறது. இது இரவு நேரத்தில் அருகில் இருக்கும் குடியிருப்பு பகுதி களில் புகுந்து மக்களை அச்சு றுத்தி வருகிறது.  இப்பகுதி யில்  தெரு விளக்குகளும் சரி வர ஒளிர்வதில்லை.

இத னால்  அவசர தேவைக்கு வெளியே வந்தால்  கரடி தாக்கும் என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். எனவே, வனத்துறையினர் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்ற னர். மேலும் நகராட்சித் துறையினர் போர்கால அடிப்படையில் மின் விளக் குகளை பழுது பார்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ள னர்.

;