உதகை, மார்ச் 4- வெளிநாட்டு மதுபானப் பெட்டி ஒன்றுக்கு இறக்கு கூலி யாக ரூ.50 வழங்கிட வேண்டும் என்று சிஐடியு டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்கள் கோரிக்கை தினம் அனுசரித்தனர். தமிழகத்தில் டாஸ்மாக் குடோனில் பணிபுரியும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு மதுபான பெட்டி ஒன்றுக்கு இறக்கு கூலியாக ரூ.7 வழங்க வேண்டும், பெட்டிக்குள் பெட்டிக்கு 8 ரூபாயும், வெளிநாட்டு மதுபான பெட்டிக்கு இறக்கு கூலியாக ரூ.50 ம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை தினம் அனுசரித்தனர். இதன்ஒருபகுதியாக நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள டாஸ்மாக் குடோ னில் சுமைப்பணி தொழிலாளர்கள் கோரிக்கை அட்டைகளை அணிந்து பணிபுரிந்தனர்.