உதகை, ஜூலை 31- உதகை - குன்னூர் சாலையில் மழைநீருடன் வழி யும் கழிவுநீரை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், உதகை - குன்னூர் சாலை யில் அமைந்துள்ள சவுத்வீக் பகுதியில் கழிவுநீர் செல்லும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் சமீப காலமாக கழிவு நீர் சாலையில் வழிந்து ஓடியது. இந்நிலையில், பருவமழை தொடங்கிய கார ணத்தால் தற்போது மழைநீரும் கலந்து சாலையெங் கும் வெள்ளம் போல் காட்சியளிக்கிறது.
இதன் கார ணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிக வும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, சம்பந்தப் பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் கழிவு நீர் செல்லும் கால்வாயை தூர்வார உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.