tamilnadu

ஆடுகளைத் தாக்கும் புலியை கூண்டுவைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை

உதகை, ஜூலை 6- நீலகிரி மாவட்டத்தில் ஆடுகளைத் தாக்கும் புலியை கூண்டு வைத்து பிடிக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே உள்ள விளங்கூர் பகுதியில் ஆசிக் என்பவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். இந் நிலையில் வெள்ளியன்று காலை சுமார் 3 மணி அளவில் இவரது ஆடு வளர்க்கும் பட்டியில் புலி ஒன்று புகுந்ததுள் ளது. அப்போது ஆடுகள்  எழுப்பிய சத்தத்தை கேட்டு  அக்கம் பக்கத்தினர் வெளியில் வந்து பார்த்த போது அந்த புலியா னது ஆடு ஒன்றை தாக்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த னர். இதனைத்தொடர்ந்து சத்தம் எழுப்பியதில் புலி அங்கிருந்து  தப்பி ஓடியது . இதில், அதிர்ஷ்ட வசமாக  ஆடு சிறு காயங்களுடன் உயிர் தப்பியது. இதற்கிடையே இதுபோன்ற சம்பவம்  அடிக்கடி நடைபெற்று வருவது குறித்து வனத்துறையினருக்கும், மாவட்ட நிர்வாகத்தி டமும் பலமுறை  புகார் தெரிவித்தும், புலியை பிடிப்பதற்கு எந்த நடவடிக்கைகளும் எடுப்பதில்லை. எனவே கூண்டு  வைத்து புலியை பிடிக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;