உதகை, ஜூலை 13 - உதகை அருகே உள்ள தேவர் சோலையில் இயங்கும் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த னர். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, எங்கள் பகுதியில் தேயிலை தோட் டத்தில் பணிபுரியும் கூலித் தொழி லாளர்கள் அதிக அளவில் வசித்து வரு கின்றனர். தற்போது எங்கள் ஊருக்கு மிக அருகில் உள்ள தங்காடு ஓர நள்ளி, தாம்பட்டி,முட்டிநாடு ஆகிய பகுதிகளில் வசிக்கும் பலருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி யாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், எங்கள் ஊரில் இயங்கும் டாஸ்மாக் கடைக்கு மதுபானம் வாங்க நோய்த் தொற்று ஏற்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் அதிக அளவில் வருகின்றனர்.
இதனால் ஏழைக் குடும்பங்கள் அதி கம் வசிக்கும் எங்கள் பகுதிக்கும் நோய்த்தொற்று பரவி விடுமோ என நாங்கள் அச்சத்தில் உள்ளோம். எனவே, இந்த மதுபானக் கடையை தற்காலிகமாக அடைத்து அல்லது வேறு பகுதிக்கு கடையை மாற்றி தரவேண்டும் என டாஸ்மாக் மாவட்ட மேலாளருக்கு கோரிக்கை வைத்தோம். ஆனால் இதுவரை நட வடிக்கை எடுக்கவில்லை. இதனால் நாங்கள் போராட்டம் நடத்த வேண் டிய சூழ்நிலையில் உள்ளோம். இத னைத் தவிர்க்க மாவட்ட ஆட்சியர் உட னடியாக டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். இவ்வாறு மனு வில் குறிப்பிடப்பட்டிருந்தது.