tamilnadu

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

உதகை,மார்ச் 9- நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று  மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தலைமை யில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, வீட்டுமனைப்பட்டா, தொழில் மற்றும் கல்விக் கடன் உதவி, முதியோர் உதவித்தொகை, சாலை, குடிநீர், கழிப்பிடம் மற்றும் மின்சார வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 208 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இதை பெற்றுகொண்ட மாவட்ட ஆட்சியர், இம்மனுக் களின் மீது பரிசீலனை செய்து உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், கடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தீர்வு காணாமல் நிலுவையிலுள்ள மனுக்க ளின் மீது விரைவான நடவடிக்கை எடுக்குமாறு துறை  ரீதியான அலுவலர்களுக்கும் உத்தரவிட்டார்.இதனைத் தொடர்ந்து மாற்றுதிறனாளிகள் நலத்துறையின்  சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்   இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நிர்மலா, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் பாபு, தனித்துணை ஆட்சியர் கண்ணன், உதவி ஆணையர் (கலால்) பாபு, மாவட்ட வழங்கல் அலுவ லர் கணேஷ், மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.