உடுமலை, அக். 25- நூறு நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு மூன்று மாதங்களாக சம்பளம் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தின் நடவ டிக்கையை கண்டித்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார் பில் வெள்ளியன்று உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற் ற்றது. உடுமலை ஒன்றிய பகுதிக ளில் உள்ள அனைத்து ஊராட்சி களில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வேலை நடை பெற்று வருகிறது. இதில் பணி புரிந்த தொழிலாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் இத்தொழிலாளர்களின் வாழ்வாதரம் மிகவும் பாதிக்கப் பட்டு உள்ளது. மேலும் தீபாவளி பண்டிகை நெருங்கி உள்ள நிலையில் உட னடியாக ஊராட்சி நிர்வாகம் நிலு வையில் உள்ள சம்பளத்தை வழங் கவேண்டும் என்று வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஒன்றியக்குழு உறுப்பினர் ரங்கராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கி.கனகராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர் பழனி சாமி மற்றும் கிளை செயலாளர்கள் செல்லமுத்து, தட்சிணாமூர்த்தி, மாணிக்கவாசகம் உள்ளிட்ட திர ளான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். மேலும், ஒன்றிய பகுதி முழு வதும் தற்போது பெய்த மழையால் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு காய்ச் சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் வருவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப் பட்டது.