tamilnadu

img

நீலகிரி: கொரோனா பாதித்த 42 பேர் டிஜ்சார்ஜ்

உதகை, ஜூலை 18 – நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதித்த 42 பேர் ஒரே  நாளில் வீடு திரும்பினர். நீலகிரியில் 371 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டு கிசிச்சை பெற்று வந்த நிலையில், 116 பேர் குண மடைந்து வீடு திரும்பினர். மேலும் 254 நபர்கள் சிகிச்சை  பெற்று வந்த நிலையில் சனியன்று ஒரேநாளில் 42 நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா பழங்கள், கபசுர குடிநீர் பொடி, முகக்கவசம் முதலிய பொருட்களை வழங்கி வழியனுப்பி வைத்தார். இந்நிகழ்வின் போது உதகை கோட்டாட்சியர் சுரேஷ், அரசு மருத்துவமனை சுகா தாரத் துணை இயக்குநர் பாலுச்சாமி, கண்காணிப்பாளர் இரியன் ரவிகுமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் உட னிருந்தனர்.

;