tamilnadu

நீலகிரி முக்கிய செய்திகள்

தெலுங்கானா அரசின் அடக்குமுறை  அரசு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

உதகை, அக்.25- தெலுங்கானா அரசின் அடக்கு முறைக்கு கண்டனம் தெரிவித்தும், பணி நீக்கம் செய்யப்பட்ட போக்குவரத்து தொழி லாளர்களுக்கு  மீண்டும் பணி வழங்கிட வலி யுறுத்தியும் உதகையில் அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  தெலுங்கானா மாநில போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களின் கோரிக்கை களை வலியுறுத்தி கடந்த அக்.5 ஆம் தேதி  முதல் போராடி வருகின்றனர். இந்நிலையில்  அம்மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் போராட்டத்தில் ஈடுபட்ட 48 ஆயிரம்  தொழிலாளர்களை பணி நீக்கம் செய்து  உத்தரவிட்டுள்ளார். இதனை கண்டித்து  அம்மாநிலம் முழுவதும் அனைத்து தொழிற் சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன.  இந்நிலையில், தெலுங்கானா அரசின் தொழிலாளர் விரோத போக்கு மற்றும் அடக்குமுறைக்கு கண்டனம் தெரி வித்தும், பணிநீக்கம் செய்யப்பட்ட போக்கு வரத்து தொழிலாளர்களுக்கு மீண்டும்  பணி வழங்கிட வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன்ஒருபகுதியாக  நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.முத்துக்குமார் தலைமை தாங்கி னார். மாவட்ட செயலாளர் ஏ.ஆர்.ஆசரா கோரிக்கைகளை விளக்கி பேசினார். நீதித் துறை ஊழியர் சங்க மாநில தலைவர் கருணா கரன், கருவூல கணக்குத்துறை ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் விஸ்வநாதன், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க  நிர்வாகி எச்.கோபால் ஆகியோர் போராட் டத்தை வாழ்த்தி பேசினர். அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஸ்ரீ பரமேஸ்வரி நிறைவுரை ஆற்றினார். முடிவில் மாவட்ட பொருளாளர் ஆனந்தன் நன்றி கூறினார். இதில் ஏராளமான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். 

உதகை வேளாண் அதிகாரி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை  ரூ.67 ஆயிரம் பறிமுதல்; 2 பேர் மீது வழக்குப் பதிவு

உதகை, அக்.25- உதகையில் வேளாண் பொறியியல் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீா் சோதனையில்  ஈட்டதில் கணக்கில் வராத  ரூ.67,803 கைப்பற்றப்பட்டது. இது தொடா்பாக இருவா் மீது வழக்குப் பதியப் பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி நீலகிரி மாவட்டத்திலுள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில் அன்பளிப்புகள் வழங்க வேண்டுமென வற்புறுத்தப்படுவதாக வெளியான புகார்களின் அடிப்படையில், மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங் களில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் கடந்த சில நாள்களாக தீவிரமாக கண்காணித்து வந்தனா். இந்நிலையில், உதகையிலுள்ள வேளாண் பொறியியல் துறை தரக் கட்டுப் பாட்டு பிரிவு உதவி வேளாண் இயக்குநா்  அலுவலகப் பிரிவிலிருந்து உர வியாபாரி களிடம் தீபாவளி பண்டிகைக்காக அன்ப ளிப்பாக குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டுமென வற்புறுத்தியதாகக் கூறப் படுகிறது. இதுதொடா்பாக வந்தப் புகார்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை  துணைக் கண்காணிப்பாளா் தட்சிணா மூா்த்தி உத்தரவின்பேரில், ஆய்வாளா் கீதாலட்சுமி தலைமையில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் அந்த அலுவலகத்தில் திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது அந்த அலுவலகத்திலிருந்து கணக்கில் வராத ரூ. 67,803 கைப்பற்றப்பட்டது. இதுதொடா்பாக நடத்தப்பட்ட விசார ணையைத் தொடா்ந்து, வேளாண்மைத் துறை உதவி இயக்குநா் சிவகுமார், உதவி  வேளாண் அலுவலா் சுப்பிரமணி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.