tamilnadu

பயிர்களைத் தாக்கும் மர்ம நோய் - விவசாயிகள் வேதனை

உதகை, நவ 13 - நீலகிரியில் கடந்த சில வாரமாக மலை காய்கறிகளை மர்ம நோய் தாக்கி வருவதால் விவசாயிகள் வேதனையடுந்துள்ளனர்.  நீலகிரி மாவட்டத்தில்,  மலை காய்கறிகள்  அதிக அளவில் பயிரி டப்படுகிறது. பைக்காரா, அனுமா புரம், டி.ஆர்.பஜார், அப்பர் புராஸ் பெக்ட், நடுவட்டம் உள்ளிட்ட பகுதி களில் உள்ள விவசாயிகள் உரு ளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், பட்டாணி உள்ளிட்ட மலை காய்க றிகளை பயிரிட்டு உள்ளனர். இந்நி லையில், கடந்த சில வாரங்களாக இப்பயிர்களை மர்ம நோய் வேக மாக தாக்கி வருகிறது. இந்த மர்ம நோயின் தாக்கத்தால் பயிர்கள் வாடி  சுருங்கி விடுகிறது. இதனால் விவசாயிகள் பெரும் துயரத்தை அடைந்து வருகின்றனர்.  இதுகுறித்து தமிழ்நாடு  விவ சாயிகள் சங்கத்தின் உதகை ஆணைக்குழு செயலாளர் சி.கிருஷ் ணன் கூறுகையில், இதுபோன்ற  நோய்த்தாக்கத்தை இப்போது தான் முதல்முறையாக பார்க்கி றோம். விதை உரம் எல்லாம் கட னாக வாங்கி விவசாயம் செய்கின்ற னர்.  தற்போது மர்ம நோய் தாக்கி பயிர்கள் அழிவதால் போட்ட முத லும் கூட விவசாயிகளுக்கு மிஞ் சாது. பாதிக்கப்பட்ட  விவசா யிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தெரிவித் துள்ளார்.