உதகை,நவ.18 - வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டத்திலிருந்து நீலகிரி மாவட்டத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங் களுக்கும் புதிதாக பசுமை வரி நிர்ணயம் செய்யப்பட் டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, நீலகிரி மாவட்டத்தில் கல்லாறு மற்றும் சோதனை சாவடிகளில் நுழையும் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்ட அனைத்து வாகனங்களுக்கும் ஒரே இனமாக ரூ.30 பசுமை வரி வசூல் செய்யப்பட்டு வந்தது. தற்போது இவ்வரியினை முறைப்படுத்தும் விதமாக வாகனங்களுக்கு ஏற்றவாறு பசுமை வரி வசூல் செய்யப்படவுள்ளது. வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்க ளிலிருந்து உள்நுழையும் பேருந்துகள் மற்றும் லாரிகளுக்கு ரூ.100 என்றும், டூரிஸ்ட் டேக்சி மற்றும் இலகுரக வாகனங்களுக்கு ரூ.70 என்றும், கார் மற்றும் ஜீப்களுக்கு ரூ. 30 எனவும், மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ.15, இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10 என புதிதாக பசுமை வரி நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த புதிய வரி வசூல் டிச.01 ஆம் தேதி முதல் அமுலுக்கு வரும் என அச்செய்திக்கு றிப்பில் கூறப்பட்டுள்ளது.