உதகை, அக். 28 - மின் ஊழியர்களுக்கு 30 சதவிகித போனஸ் வழங்கிடக் கோரி சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டத்தில் மசினகுடி, குந்தா உள்ளிட்ட பகுதி களில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மின் ஊழியர் மத்திய அமைப்பின் மசினகுடி கிளை தலைவர் சாலி, செயலா ளர் ராமகிருஷ்ணன், இணைச் செயலாளர் முத்து, பைகாரா கிளைச் செயலாளர் கண்ணன், குந்தா கிளை தலைவர் எஸ். முரளிதரன், செயலாளர் எம். முரளிதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங் களை எழுப்பினர்.