tamilnadu

img

ஹெத்தையம்மன் பண்டிகைக்கு  டாஸ்மாக் ஊழியர்களுக்கு விடுமுறை  சிஐடியு கோரிக்கை ஆர்ப்பாட்டம்

 உதகை, டிச. 23- ஹெத்தையம்மன் பண்டிகையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கும் விடு முறை அளிக்க வேண்டும் என்று சிஐடியு சார்பில் கோத்த கிரியில் திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஹெத்தை யம்மன் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அப்போது பெரும்பாலும் மக்கள் மதுவை தவிர்த்து விரதம் இருப் பார்கள். இந்த பண்டிகையின் போது மாவட்ட நிர்வாகத் தால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆனால் டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடு முறை அளிப்பதில்லை.  இதுகுறித்து கடந்த 3 ஆண்டுகளாக டாஸ்மாக் ஊழி யர் சங்கத்தினர் மனு கொடுத்து முறையிட்டும் பயனில்லை.  எனவே ஹெத்தையம்மன் பண்டிகையின் போது டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி கோத்தகரி மார்க்கெட் திட லில் சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு டாஸ்மாக்  ஊழியர் மாநில சம்மேளன துணை தலைவர் ஜெ.ஆல் தொரை தலைமை வகித்தார். நீலகிரி மாவட்ட மரம் மற்றும் பொது தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளர் முரு கேசன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். சம்மேளன குழு உறுப்பினர் ஏ.நவீன்சந்திரன், மாவட்ட செயலாளர் மகேஷ் ஆகியோர் கோரிக்கையை விளக்கிப் பேசினர். மின்ஊழியர் மத்திய அமைப்பின் பொன்னு ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினார். இதில் டாஸ்மாக் ஊழியர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.