tamilnadu

img

கூடலூரில் தீ விபத்து - கடைகள் எரிந்து சேதம்

உதகை, நவ 8 - கூடலூர் அருகே  கடையில் தீ விபத்து ஏற்பட்டதால் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த எம்ஜிஆர் நகர் பகுதியில் ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ஞாயிறன்று நள்ளிரவில் திடீரென அங் குள்ள  சிறு தொழில் நிலையங்கள்  மூன்று தீப்பிடித்து எரிந் தன. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர். அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க போராடினர். ஆனால், கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் துணிகள் இருந்ததால் தீ மளமளவென எரிந்தது. இதனால் கடைகளில் இருந்த  அனைத்து பொருட் களும் எரிந்து சேதம் அடைந்தன.