உதகை, ஆக. 9 - நீலகிரியில் ஊரடங்கு விதியை மீறிய மத்திய அரசு அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர் தங்கியிருந்த வெடிமருந்து தொழிற்சாலை விடுதிக்கு வரு வாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். நீலகிரி மாவட்டத்திற்கு வெளியூர்களில் இருந்து வரும் நபர்கள் மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிக ளில் நடத்தப்படும் கொரோனா பரிசோதனைக்கு பின்பு அரசு அறிவித்துள்ள விடுதிகளில் தனிமைப்படுத்தபடு கின்றனர்.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் பத்ரா பகுதியில் இயங்கிவரும் மத்திய அரசின் படைக்கள தொழிற் சாலையில் துணைப் பொது மேலாளராக பணியாற்றி வருப வர் ராஜ்குமார்(59). இவர் இ-பாஸ் மூலம் கடந்த 5 ஆம் தேதி தனது சொந்த ஊரான நீலகிரி மாவட்டம் மணியட்டி கிராமத் திற்கு வந்துள்ளார்.
அப்போது, பர்லியார் சோதனைச் சாவடி யில் சுகாதாரத்துறையினரால் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, முடிவுகள் வரும் வரை அரசு நிர்ணயித்துள்ள கல்லூரி அல்லது விடுதியில் தங்க வேண்டுமென அறிவு றுத்தியுள்ளனர். ஆனால் அவர் அங்கு தங்காமல் அருவங் காடு வெடிமருந்து தொழிற்சாலையில் உள்ள விடுதியில் தங்கியுள்ளார். இத்தகவலறிந்து வந்த வருவாய்த்துறை அதி காரிகள், விடுதிக்கு சீல் வைத்தனர்.
மேலும், இதுதொடர் பாக கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் அடிப்படை யில் அருவங்காடு போலீசார் ஊரடங்கு விதிமீறல் செய்த தாக ராஜ்குமார் மீது வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, அவர் அரசு அனுமதித்துள்ள விடுதியில் தனிமைபடுத்தப் பட்டார்.